Sunday, November 20, 2011

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை




சடசடத்துப் பெய்த
மழையின் குளிரில்
உள்ளம் நெகிழ்ந்திருந்த
ஒரு மாலை வேளையில்
பலாக்காரமாகப் பிரிக்கப்பட்ட
என் நண்பன்
நிச்சயப்படுத்தப்பட்ட
கால மழைபோல
திரும்பி வருவானென
எப்படி எதிர்பார்க்க முடியும்!

நேற்று.இன்று..நாளையென
நாட்கள்
நிம்மதியைத் தொலைத்து விட்டபின்பும்
அவர்கள்
சொல்கிறார்கள்
என் நண்பன்
நாளை வருவானென

தேவையில்லை

இனி என் நண்பன்
எப்போது வருவானென்று
யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை

எனக்குள்
எப்போதும் இருக்கும் என் நண்பன்
இனி ஒருபோதும் வரமாட்டானென்று
இப்போது எனக்கு
உறுதியாகத் தெரியும்.

-.மேரா-

No comments:

Post a Comment