Thursday, January 31, 2013

துரோகம்


கறையான் கட்டிய புற்றில் நேற்று 
 கொடும் அரவம் நுழைந்தது.
 மழை,வெயில்,பணியென 
காலங்களுக்கு வளைந்து நின்று 
கட்டிய வீட்டை பறிகொடுத்த சோகம் மனதில் படிய
 நிற்குமதன் யோசனையெல்லாம் 
 புற்றில் அரவம் நுழைய வழியேன் வைத்தோமென்பதுதான்.