வாய்க்கால்(கலை,இலக்கியத்தளம்) அரசையூர் மேரா
Thursday, January 31, 2013
துரோகம்
கறையான் கட்டிய புற்றில் நேற்று
கொடும் அரவம் நுழைந்தது.
மழை,வெயில்,பணியென
காலங்களுக்கு வளைந்து நின்று
கட்டிய வீட்டை பறிகொடுத்த சோகம் மனதில் படிய
நிற்குமதன் யோசனையெல்லாம்
புற்றில் அரவம் நுழைய வழியேன் வைத்தோமென்பதுதான்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)