மண் மறக்காத் துயரமாய்
அழிந்து கருகிப் போன
பயிர்களுக்கு
மரணச் சாட்சிகள்
எதுவுமில்லை.
அவைகளின் தொகைகளும்
சரியாய்த் தெரியாது.
பாவம்
வேலி பயிரைக் காக்குமென்று
நம்பி
ஒலிவ் மரத்தைச் சுற்றி
ஓங்கி வளர்ந்து நின்ற
பயிர்கள் அவை
காவலுக்கு நின்ற வேலி
கரைதாண்டும்
கலிகாலக் கடல்போல
பலிகொண்டு போனதால்
மண் மறக்காத் துயரமாய்
அழிந்து கருகிப் போன
பயிர்களுக்கு
மரணச் சாட்சிகள்
எதுவுமில்லை.
No comments:
Post a Comment