வேட்டைப் பற்களை
கடைவாயில் கிட்டிக் கொண்டு
நாக்கு நீழ
ஈரற் குலை பிடுங்கும்
கொலை காரனைப் போல
யாருக்காக இந்த நாய்
காத்து நிற்கிறதோ!
பழக்க தோசமோ!
மேலதிக நேரமும்
பணியாற்ற வேண்டிய கட்டாய கடமையோ!
கால் வலிக்காதோ! கண்சோராதோ!
இனியும்
துரத்திக் கடிக்குமோ!
அதன் விசம் ஏறி இறந்தால்
விசாரனை எப்படி நடக்குமோ!
சாட்சி சொல்ல யாரேனும் வருவார்களோ!
வைரவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமோ!
பள்ளி செல்லும் என் மகனை
விரட்டுமோ!
மனைவி வேலை விட்டு வரும் போது
கண்களை உருட்டிப் பார்க்குமோ!
என்னைக் கடித்து உண்பது பற்றி
திட்டம் வகுக்குமோ!
யாரிடமும் முறையிட்டால்
ஏதேனும் நடக்குமோ!
அடி மனதில் எப்போது அதற்கு
அன்பு ஊறுமோ
அன்றே அதற்கு எல்லோர் வீட்டிலும் விருந்து.
-த.மேரா-
No comments:
Post a Comment