“பல்லிகளைக் கொல்லாதீர்”
என
அறிவிக்கும் அரச வாகனம்
வீதியால
சென்று கொன்டிருந்தது.
அந்த அரச வாகனம்
சொல்லியது:
“பல்லிகளைக் கொல்லாதீர்”
அவைகளுக்கும்
அனைத்து உரிமைகளும் உண்டு.
அறிவிப்பின் ஈர்ப்பில்
மனம் நெகிழ்ந்து
சந்தோசமாய்த் தெருவோரம் நின்ற
பல்லியொன்றின் தலையில்
திடீரென
அரச வாகனம் ஏற
நச்சென்ற பல்லி
நடுவீதியில் பிணமாய்ச் சரிந்தது.
உயிர் காக்கும் பணியில்
உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதென
மரண விசாரணை
முடக்கப்பட்டது.
மீண்டும்
“பல்லிகளைக் கொல்லாதீர்”
என்ற அறிவிப்புடன்
அரச வாகனம்
நகர்ந்தது.
No comments:
Post a Comment