மனவெளியில் திடீர் அகால மரணம்…..
உரையாலில் பயன்படுத்தக் கூடாத அந்தவோர் வார்த்தையை நீ நிச்சயம்
தின்றிருக்கவேண்டும்.
கக்கியிருக்கக் கூடாது.
நான் உன்னையும் நீ என்னையும்
நேசித்தது
நிலவை உண்ண விரும்பிய குழந்தையின் நினைவுபோலாகிவிட்டது.
நினைவுகள் தொடர்ந்த நம் காலத்தை
இரு சமாந்தரங்களாக இருந்து கனவு காண்போம்.
அப்போது
அமரத்துவமடையாத ஆத்மாவைப்போலவே
நினைவுகளும் என்ற குறிப்பை
வெளியெங்கிலும் எழுதி எழுதி பகிர்வோம்.
No comments:
Post a Comment