Thursday, May 23, 2013

காதல் பரிசு

காதல் பரிசு

அவளதுகனவோடையில்

நீந்திநீளத்துயின்றஅந்நாளில்

எனக்கோர் ஆசையிருந்தது.




மீசைஅரும்பத்துடிக்கும்

இளவேனில் பருவத்தில்

எல்லோருக்கும் அதுதான் வரும்.

பூசைநேரமணியோசையிலோ

கோபுரதரிசனத்திலோகடவுள் நினைவுக்குவருவதுபோல

அவள்நினைவைநான் தின்னவில்லை.


எல்லாம் அவளாகிய“ஏகம் சத்”

தத்துவந்தான் அன்று

எனக்குள் ஒலித்தகீதை.


எனக்குள் அன்றுஅவள் உறைந்திருந்ததுபோல்

அவளுக்குள் நானிருந்தேனென்பது

அவள் என்னை இறுகப்பிடித்துப் பருக்கியமுத்தம்

இன்றும் சத்தியம் செய்கிறது.


நீரோடைபோல் அவள் முழுவதும்

சலசலத்தஎன்னைஅவளேசுருக்கிச் சுருக்கி

சுருக்கிட்டுகொலைசெய்ததை

அவளுக்குள் நான் செத்துநாறியபோதுஅறிந்தேன்.


இப்போதுஎனக்குள் இருந்த ஆசை

பாட்டனைப் பயமுறுத்தியபேய் பிடித்தகிழட்டுஆலமரத்தின் கீழ்

பைத்தியம் பிடித்துகுந்தியிருப்பதுஅவளுக்குத் தெரியாது.




மேரா

No comments:

Post a Comment